கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது.
இந்த முடிவை கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்ததாக, மாநில சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) தெரிவித்தார்.
சஹஸ சிம்மா (துணிச்சலான சிங்கம்) எனப் போற்றப்படும் விஷ்ணுவர்தன், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அவரது கலைப்பயணம், அவரை தென்னிந்திய சினிமா வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவராக நிலைநிறுத்தியது.
அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு
