ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது, முக்கிய அரசியல் களத்தில் ஒரு முதல் முயற்சியாக கருதப்படுகிறது.
கட்சியின் நிறுவனர் ஷின்ஜி இஷிமாரு, இந்த ஆண்டு நடந்த மேல்சபை தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 25 வயது மாணவர் கோகி ஒகுமுரா, “ஏஐ புதிய தலைவராக இருக்கும்.
ஆனால், இந்த ஏஐ உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்காது.
மாறாக, அவர்களிடையே வளங்களை விநியோகிப்பது போன்ற நிர்வாக முடிவுகளில் கவனம் செலுத்தும்.” என்று தெரிவித்தார்.
ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்
