“நடிகர் விஜய்க்கு எதிராக பேசக்கூடாது”… திமுக தலைமை உத்தரவு போட்டது உண்மைதான்… போட்டுடைத்த அமைச்சர் காந்தி…. அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய பேட்டி..!!! 

Estimated read time 1 min read

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம், ஓர் அணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சங்கரமடம் அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்க, பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசும் வகையில், கைத்தறி துணிநூல் மற்றும் நெசவுத்துறை அமைச்சர் ரு.காந்தி, நடிகர் விஜய்யை நேரடியாக பெயர் குறிப்பிடாமல், அவரை குறிவைத்து விமர்சனம் செய்தார். “யார் யாரோ ரோட்டுல இறங்கி பேசுறாங்க. ஆனால் நம்மல வெளியே பேசக்கூடாது என தலைமை கட்டளை விதிச்சிருக்காங்க. ஆனா, எது நடந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை யாராலும் குறிக்க முடியாது. மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த பெருமை, எம்.ஜி.ஆர்-ஐ கூட மிஞ்சும் அளவுக்கு இருக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தி.மு.க.வின் ஒற்றுமை, மக்கள் ஆதரவு மற்றும் நிர்வாக திறன் ஆகியவை ஒன்றிணைந்தால், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்பதையும் அமைச்சர் உறுதியுடன் கூறினார். அவரது பேச்சு, கட்சியின் உள்ளார்ந்த நம்பிக்கையை சுட்டிக்காட்டினாலும், எதிர்கட்சிகளை சீராக சாடும் வார்த்தைகள் அங்கே கணிசமாகக் கேட்டதைக் குறிப்பிட வேண்டியது தான்.

Please follow and like us:

You May Also Like

More From Author