திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக இன்று (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மருடன் ஜனவரி 29ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் [மேலும்…]
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. 2025 டிசம்பர் [மேலும்…]
சர்வதேச நிலைமை பதற்றமாகி வரும் பின்னணியில், பிரிட்டன் தலைமை அமைச்சர் கீர் ஸ்டார்மர் தனது சீனப் பயணத்தைத் துவங்கினார். கடந்த முறை பிரிட்டன் தலைமை [மேலும்…]
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பணவீக்கம் மிதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் [மேலும்…]
இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட, அந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட நகரங்களின் வளர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது. மல்டிபாலிடன் (Multipolitan) நிறுவனம் [மேலும்…]