திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக இன்று (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று ஒரே [மேலும்…]
உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் [மேலும்…]
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை [மேலும்…]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளைத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். [மேலும்…]
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் இரயில்களில் பயணம் செய்யும் நிலையில், 1986-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பழைய முன்பதிவு முறைக்கு [மேலும்…]
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் [மேலும்…]
இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ‘சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க [மேலும்…]
மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், 15ஆம் நாள் குவைத் நகரில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாராஹ் சந்தித்தார். ஜாய் [மேலும்…]