திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக இன்று (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வின் வழிகாட்டல் கோட்பாட்டை மாநில மற்றும் அமைச்சர் நிலை தலைவர்களும் ஊழியர்களும் கற்றுக் [மேலும்…]
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவர் சமீர் வி காமத், மிகவும் எதிர்பார்க்கப்படும் அக்னி-6 பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைத் தொடங்குவதற்குத் [மேலும்…]
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான சீனா-மலேசியா வாசகர் சந்திப்பு ஏப்ரல் 30ஆம் [மேலும்…]
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையின் 11ஆவது பரிசீலனை மாநாடு நியூயார்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுத கட்டுப்பாட்டுப் [மேலும்…]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் குமார் மிருத்யுஞ்சய் தலைமையிலான குழு, உயிருள்ள நியூரான்கள் மின்னணு சாதனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு [மேலும்…]
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவருமான ஷி ச்சின்பிங், கட்சி மத்தியக் கமிட்டியின் [மேலும்…]
விண்வெளி ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது என்பது பல மாதங்கள் நீடிக்கும் ஒரு நீண்ட பயணமாக இருந்து வருகிறது. ஆனால், புதிய ஆய்வு ஒன்றின்படி, [மேலும்…]
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 [மேலும்…]