திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக இன்று (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் கடைசி நேர பயணத்துக்கு தத்காலில் டிக்கெட் பெற, கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த வகை டிக்கெட் எடுக்க [மேலும்…]
மேஷம்: இன்று தைரியத்துடன் நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் நாள். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் [மேலும்…]
‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் ஏழைகளின் சங்கர் என [மேலும்…]
அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் விஜய் 3-வது இடத்தில் உள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்ற சொத்து விவரங்களின் அடிப்படையில், [மேலும்…]
தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை பதக்க விழா நடைபெற்றது. விழாவில் குடியரசுத்தலைவர், [மேலும்…]
காவிரி & மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு ஆக-3 அன்று நண்பகல் 12 மணிக்கு செல்லவிருந்தார். இதற்காக கர்நாடகா அரசும் தயார் [மேலும்…]
ஜப்பானிய தேசிய உளவுப் பணியகம் ஜூலை 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது குறித்து சீன ஊடகக் குழுமம் உலகின் 3028 இணையப் பயனர்களிடையில் [மேலும்…]
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் [மேலும்…]