இந்தியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல்: சீன வெளியுறவு அமைச்சு

இந்தியாவில் 27ஆம் நாள் சனிக்கிழமையன்று ஏற்பட்டகூட்ட நெரிசலினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின்
செய்தித்தொடர்பாளர் குவோ ஜியா குன் 29ஆம் நாள் கூறுகையில், இச்சம்பவத்தை நாங்கள்
கவனித்துள்ளோம் என்றும், உயிரிழந்தோருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து
கொள்கின்றோம் என்றும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆறுதல்
தெரிவித்து கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் நடந்த
உடன் இந்தியாவுக்கான சீனத தூதரகம் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author