ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக

ஹிமாச்சல பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஆளுநரை சந்தித்து பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி, ராஜ்யசபா தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, மாநில சட்டசபையில், சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ளனர்.

இது குறித்து, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர், கட்சி எம்எல்ஏக்களுடன் புதன்கிழமை ராஜ்பவனில் ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் தாக்கூர்,”ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

தற்போது, காங்கிரஸ் அரசு, ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது” என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author