சீனாவின் மகளிர் இலட்சியத்தைப் பாராட்டிய ஐ.நா மகளிர் பணி அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் இயக்குநர்

Estimated read time 1 min read

ஐ.நா மகளிர் பணி அலுவலகத்தின் ஆசிய-பசிபிக்பிரிவின் இயக்குநர் க்ரிஸ்டின் அராப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக்
குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்ற உலக
மகளிர் உச்சிமாநாடு குறித்து அவர் கூறுகையில், நடப்பு உச்சிமாநாடு, மகளிர்
தொடர்புடைய அம்சங்களில் மட்டுமல்ல, சமூக மற்றும் நாடுகளின் வேகமான வளர்ச்சியிலும்
கவனம் செலுத்தியது. பாலின சமத்துவத் துறையில் சீனா உலகிற்கு ஆற்றிய பங்கு மிகவும்
முக்கியமானது. உலகின் ஐந்தில் ஒரு பகுதி மகளிர் சீனாவில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் தொழில், கல்வி முதலிய துறைகளில் பெற்றுள்ள சாதனைகளுடன், பாலின சமத்துவத்தை
விரிவாக்குவதற்கு சீனா பாடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், அறிவு பகிர்வு
முன்னெடுப்பு, புத்தாக்கம், பாலின சமத்துவம், மகளிர் உரிமை முதலியவற்றை
முன்னேற்றும் வகையில், சீனா தெற்கு-தெற்கு ஒத்துழைப்பில் முதலீட்டை தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. ஐ.நா மகளிர் பணி அலுவலகத்துக்கும் சீனாவுக்குமிடையிலான ஒத்துழைப்பு,
சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டத்துடன் ஒன்றிணைந்தது. குழந்தை மற்றும் மகளிர்
பராமரிப்பு, மகளிர் உரிமைகள், பசுமை தொழில் மாற்றம் முதலியவை இரு தரப்பின்
ஒத்துழைப்பில் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author