சீனாவின் ஹைனான் மாநிலத்தில் உள்ள வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-10B சுமை ராக்கெட்டு மூலம் ஒரு செயற்கைக் கோள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிறகு, இந்த சுமை ராக்கெட்டின் முதல் கட்டம் கடற்பரப்பில் கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது. உலகளவில் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
