வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, வரும் அக்டோபர் 27ஆம் தேதி மொந்தா புயலாக (Cyclone Montha) மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவாகும் இந்தப் புயல், தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து ஆந்திர மாநிலக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் சின்னம் வலுப்பெற்று வருவதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 25) காலை முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
