தைவானின் மீட்பு நினைவு தினத்தையொட்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் பணி அலுவலகமும், சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகமும் அக்டோபர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில்,விருந்தளித்தன. இதில் தைவானின் மீட்பின் 80வது ஆண்டு நிறைவு மாநாட்டில் கலந்து கொண்ட தைவானின் பல்வேறு துறையினர்கள், சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் பணி அலுவலகம் மற்றும் சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் இயக்குநர் சொங்தாவ் உரை நிகழ்த்திய போது கூறுகையில், தைவானின் மீட்பின் நினைவு தினத்தை நிறுவுவது, ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பேணிக்காத்து, தைவான் சுதந்திர சக்தி மற்றும் வெளிப்புறத் தலையீட்டைத் தடுப்பதற்கான வலிமைமிக்க நடவடிக்கையாக திகழ்கிறது என்றார்.
மேலும், தைவான் பிரிவினைவாத சக்தியை தோற்கடித்து, தைவான் நீரிணையின் இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான ஆற்றல் நமக்கு உண்டு.
தாய்நாட்டின் ஒன்றிணைப்பை முன்னேற்றி, தைவான் சகநாட்டவர்களின் நலன்களை அதிகரிப்பதற்கான நம்பிக்கை நமக்கு உண்டு. பல்வேறு அறைக்கூவல்களைச் சமாளித்து, சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவதற்கான மனவுறுதி நமக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
