அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அத்தியாவசிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான வரியைக் குறைக்கும் நிர்வாக ஆணையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கையெழுத்திட்டார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கவலைகள் முக்கியப் பிரச்சினையாக மாறியதாலும், அதிக விலைவாசி உயர்வால் நுகர்வோர் அழுத்தத்தை உணர்ந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாக ஆணையின்படி, காபி, வாழைப்பழம், மாட்டிறைச்சி, பழச்சாறு, தக்காளி, தேங்காய், பழங்கள் உட்படப் பல பொருட்களின் இறக்குமதி மீதான பரஸ்பர வரி (Reciprocal Tariff) நீக்கப்பட்டுள்ளது.
இந்த வரியானது 10% முதல் 50% வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரி குறைப்பு அமெரிக்க நுகர்வோருக்குப் பொருட்களின் விலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்
