சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!

Estimated read time 1 min read

3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

கடந்த 23-ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார்.  கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இந்தோ – பசிபிக் விவகாரங்கள், மேற்கு ஆசிய பிரச்சனை, சர்வதேச பிரச்சனைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், சிங்கப்பூர் மூத்த அமைச்சர்களை, மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மேலும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் 60 ஆண்டுகால தூதரக உறவு பற்றி பேசினார்.

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யாங், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹீன், நிதி அமைச்சர் லாரன்ஸ் வாங் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இதனை அடுத்து, சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் புறப்பட்டு சென்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author