புதுச்சேரி கனமழை எதிரொலி : மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

Estimated read time 1 min read

சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அ. நமச்சிவாயம் உத்தரவின்படி இன்று (நவம்பர் 18, திங்கள்) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் இன்று அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் இந்த விடுமுறையைப் பினன்படுத்தியுள்ளன.

மழை காரணமாக பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் அறிவிப்புகளை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளை (நவம்பர் 19) பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வானிலை மாற்றம் இருந்தால் மீண்டும் அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author