ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி  

Estimated read time 0 min read

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
இனிமேல் ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் தங்களுடன் இருமுடிப் பையை எடுத்துச் செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
சபரிமலை விரத காலத்தில், ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் பயணிக்கும்போது, இருமுடிப் பைகளை உடன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுவது குறித்து அவ்வப்போதுச் சர்ச்சைகள் நிலவி வந்தன.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

You May Also Like

More From Author