குழந்தை பாக்கியம் இல்லையா? நம்பிக்கையுடன் திருக்கருகாவூர் செல்லுங்கள்! – அதிசய நெய் பிரசாதம்!

Estimated read time 0 min read

1. கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் :

குழந்தை இல்லாதவர்கள், கருவில் குழந்தை தங்காதவர்கள், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்கிறவர்கள் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபடலாம். குழந்தை இல்லாதவர்கள் இங்கு பிரசாதமாக தரப்படும் நெய்யை வாங்கி, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால், விரைவில் அந்த தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும்.

2. குக்கே சுப்ரமணியர் கோவில் :

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள குக்கே சுப்ரமணியர் கோவில் குழந்தை வரம் தரும் மற்றொரு அற்புதமான கோவில். குழந்தை இல்லாத தம்பதிகள் இக்கோவிலுக்கு சென்று சர்ப சம்ஸ்கார பூஜை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்க தடையாக இருக்கும் நாக தோஷம் விலகும். இங்குள்ள குமாரதாரா ஆற்றில் நீராடி, குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த பூஜையை செய்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இது மிகவும் சக்திவாய்ந்த கோவிலாகும்.

3. மீனாட்சி அம்மன் கோவில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சென்று வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும். பாண்டிய மன்னனுக்கு பல காலமாக குழந்தை இல்லை என்ற குறையை போக்க அன்னை பராசக்தியே மகளாக வந்து அவதரித்த தலம் இது. இங்கு தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு தாயாக இருந்து அன்னை மீனாட்சி அவர்கள் வேண்டும் வரங்கள் அனைத்தும் அளித்து, குறைகளை போக்கும் தெய்வமாக இருந்து வருகிறாள். அதனால் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.

4. சந்தான வேணுகோபால சுவாமி கோவில் :

கர்நாடகாவில் உள்ள 1800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். குழந்தை இல்லாத பல தம்பதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து வழிபட்டு, பலன் பெற்று செல்கிறார்கள். இங்கு வந்து குழந்தை கிருஷ்ணனுக்கு பூஜை செய்து வழிபட்டால் அவர்களுக்கு கண்ணனே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் தருவதுடன் சர்ப்ப தோஷம் போக்கும் திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

5. மன்னர்சாலா நடராஜர் கோவில்:

கேரளாவில் உள்ள மன்னர்சாலா நடராஜர் கோவில் நாக தேவதைகள் வழிபாட்டிற்கான கோவிலாகும். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவில் உருளி கமழதாள் எனப்படும் சிறப்பு சடங்கு ஒன்றை செய்கிறார்கள். இந்த பூஜை செய்பவர்களுக்கு சிறப்பாக மஞ்சள் கலவை ஒன்றை பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்த மஞ்சளை வீட்டில் வைத்து வழிபட்டாலும், தினமும் நெற்றியில் வைத்து வந்தாலும் விரைவில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது நம்பிக்கை. இப்படி வழிபடும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author