கிறிஸ்துமஸ் பண்டிகை : இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!!

Estimated read time 0 min read

1920 ஆம் ஆண்டுகளில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வந்தது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 57,000 ஆக இருந்த நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கும் சராசரியாக 5,000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை உயர்ந்தது.

இதன் காரணமாக ஆண்டின் இறுதியான டிசம்பரில் ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. இனி சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில், இன்று (டிச.25) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,820க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.245க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author