2025ம் ஆண்டு, சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாகவும், 15வது ஐந்தாண்டு திட்டமிடும் ஆண்டாகவும் திகழ்கிறது. இவ்வாண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, இடைவிடாமல் பணிபுரிந்து வருகிறார்.
கிராமப்புறங்கள், பண்டைய நகரங்கள், தோட்டங்கள், தொழிற்சாலைகள், அறிவியல் புத்தாக்கத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு பயணம் மேற்கொண்டு, பல புதிய கருத்துகளை முன்வைத்துள்ளார்.
டிசம்பர் 3ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள தியேன் அன் மன் சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பில், சீனத் தேசத்தின் மாபெறும் மறுமலர்ச்சி தடுக்கப்பட முடியாதது என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
சீனாவின் பல்வேறு இடங்களில் ஷிச்சின்பிங்கின் அடிச்சுவடுகளின் மூலம், மக்கள் முதன்மை, உயர் தர வளர்ச்சி, பண்பாட்டுத் தொடர்ச்சி, பொது மக்களின் ஒற்றுமை ஆகியவை வெளிக்காட்டப்படுகின்றன.
