2026 ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி திங்கட்கிழமை (டிசம்பர் 29) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் கணக்கில் செலுத்தப்படும். ரொக்கப் பணம் தவிர, பொங்கல் சமைக்கத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.
இதில் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு நீளக் கரும்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு
