டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

டெல்லி  மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை,  தலைநகரில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில், டெல்லி மெட்ரோவின் 4ம் கட்டத்தின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான பாதைகள், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.8,399 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் நடைபாதைகள், 20.762 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இது நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயணிகளுக்கு தடையற்ற இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வழித்தடம், 8.385 கிலோ மீட்டர் வரை நீண்டு, முழுவதுமாக உயர்த்தப்பட்டு, எட்டு நிலையங்களாக அமையும்.  இதன் கட்டுமான பணிகள் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author