இந்தோனேசியாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Estimated read time 0 min read

இந்தோனேஷியாவின் தோபெலோ நகரத்திற்கு மேற்கே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது என்று அந்நாட்டு வானிலை, பருவநிலை மற்றும் நிலவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதி, தோபெலோ மாவட்டத்திலிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவில், 123.9 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை எந்த உயிரிழப்பும், பொருட்கள் சேதமும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை. ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author