பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் காலமானார்  

Estimated read time 0 min read

தமிழ் சினிமா மற்றும் ஆன்மிகத் துறையில் தனது பாடல்களால் முத்திரை பதித்த மூத்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) காலமானார்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தில் பிறந்த இவரது இயற்பெயர் முருகவேல் காந்தி.
நாடகங்கள் மீதான ஆர்வத்தால் தன் பெயரை செங்குட்டுவன் என மாற்றிக்கொண்டார்.
அவரது வாழ்க்கையில் `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்` மற்றும் `நான் உங்கள் வீட்டுப் பிள்ளை` போன்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
குறிப்பாக, `கந்தன் கருணை` படத்திற்காக அவர் எழுதிய `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்` என்ற பக்திப் பாடல், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author