சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் மிக மூத்த மற்றும் சக்திவாய்ந்த இரண்டு தளபதிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் மீது தீவிர ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்ட தளபதி ஜாங் யூக்ஸியா மற்றும் லியு ஜென்லி ஆகியோர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவத்தின் உயர்மட்ட அமைப்பான மத்திய ராணுவ ஆணையத்தில் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக இருந்த இவர்கள் நீக்கப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
