சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

Estimated read time 0 min read

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 358 பேருக்கும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 110 மாணவ, மாணவிகளுக்கும் தங்கப் பதக்கத்துடன் சான்றிதழ்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி கல்வி இயக்கத்தின் இயக்குநரும், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிர்வாகக்குழு அமைப்பாளருமான சுந்தரவல்லி, உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஜெயந்தி, பதிவாளர் ராஜ், தேர்வாணையர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author