இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த சில நாட்களில் கூட்டறிக்கை வெளியாகும்  

Estimated read time 0 min read

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில் கையெழுத்திடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி குறித்த சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மார்ச் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author