அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளுக்கும் இடையே துண்டிக்கப்பட்டிருந்த உயர்மட்ட ராணுவத் தொடர்புகள் (High-level military dialogue) மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
உக்ரைன் போர் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இடைநிறுத்தப்பட்ட இந்த நேரடித் தொடர்பு, தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமலுக்கு வருகிறது.
அபுதாபியில் நடைபெற்ற அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ரஷ்யா இடையே மீண்டும் ராணுவப் பேச்சுவார்த்தை: 4 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய உடன்பாடு
