கடந்த 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியின் கீழ் இருந்த பங்களாதேஷ், இன்று (பிப்ரவரி 12, 2026) தனது அடுத்த அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலை சந்திக்கிறது.
ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், ஆசிய பிராந்தியமே இதனை உற்று நோக்குகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக ஷேக் ஹசீனா (அவாமி லீக்) மற்றும் காலேதா ஜியா (BNP) ஆகிய இருவருமே களத்தில் இல்லை.
ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார், காலேதா ஜியா கடந்த டிசம்பரில் காலமானார்.
வங்கதேசத்துடன் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவுக்கு, அங்கு அமையும் அரசு மிகவும் முக்கியமானது.
பங்களாதேஷ் பொதுத்தேர்தல் 2026: முக்கிய வேட்பாளர்கள், தேர்தல் களம்
