இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகளின் விவரம் வெளியாகியுள்ளது.
லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் இதுவரை இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஏழு அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. குறிப்பாக குரூப் பி பிரிவில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எட்டாவது இடத்திற்கான போட்டி குரூப் ஏ பிரிவில் இந்தியாவுடன் மோதவுள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையே நிலவுகிறது. இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் நமீபியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் வெற்றிபெற்றால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அல்லது அமெரிக்க அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். இப்போதே கிரிக்கெட் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
