பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
“இந்த மாநாட்டின் கண்காட்சியில் உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் ஏஐ கண்டுபிடிப்புகளைக் காட்டினேன்.
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், விவசாயிகள் தங்கள் பால் பண்ணைகளை 24 மணிநேரமும் ஏஐ உதவியுடன் கண்காணிப்பதிலும் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் உலகையே வியக்க வைத்துள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் உலகையே வியக்க வைத்த இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
