கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (பிப்ரவரி 26, 2026) இந்தியாவிற்குத் தனது அதிகாரப்பூர்வமான பயணத்தைத் தொடங்குகிறார்.
இந்தப் பயணத்திற்கு முன்னதாக, கனடா அரசு இந்தியா குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, கனடாவில் நடைபெற்ற வன்முறை செயல்களில் இந்தியாவிற்குத் தொடர்பு இல்லை என்று கனடா அரசுத் தரப்பு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
முந்தைய ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கடும் மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ‘டிப்ளமேட்டிக் ரீசெட்’ பார்க்கப்படுகிறது.
இந்தியா-கனடா உறவில் அதிரடி மாற்றம்: வன்முறைப் புகார்களைத் திரும்பப் பெற்ற கனடா
