ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடும் வன்முறை வெடித்தது.
அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தூதரகத்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி, கற்களையும் தடிகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சியில் அமெரிக்கத் தூதரகம் தாக்குதல்: பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
