1 டிரில்லியன் யுவானை தாண்டவுள்ள பெய்டோ தொடர்பான தொழில்கள்

பெய்டோவ் புவியிடங்காட்டி முறைமையின் அடிப்படையில் செயல்படும் தொழில்களின் அளவு 5 ஆண்டுகளுக்குள் 1 டிரில்லியன் யுவானைத் தாண்டக் கூடும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் தலைவர் ஜெங் ஷான்ஜியே மார்ச் 6ஆம் நாள் கூறினார். 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் பொருளாதாரத்தைக் கருப்பொருளாக கொண்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், பெய்டோவ் புவியிடங்காட்டி முறைமையின் பெருமளவு பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தை சீனா தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author