சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மார்ச் 6ஆம் நாள் பிற்பகல் சென்று பார்வையிட்டார். சீன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் ஜனநாயகக் கட்சி, ஜுயுசான் சங்கம், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, நலவாழ்வு மற்றும் காப்புறுதித் துறை ஆகியவைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர்களின் விவாதத்தில் கலந்து கொண்ட ஷிச்சின்பின், அவர்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கேட்டறினார்.
