இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) முறைப்படி தொடங்கி வைத்தார்.
இதில் மிகவும் முக்கியத்துவமானது, நாட்டின் முதல் முழுமையான ரிங் மெட்ரோ செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகும்.
மஜ்லிஸ் பார்க் முதல் மௌஜ்பூர் – பாபர்பூர் வரையிலான சுமார் 12.3 கிலோமீட்டர் நீளமுள்ள பிங்க் லைன் விரிவாக்கத்தை அவர் தொடங்கி வைத்ததன் மூலம், இந்த பிங்க் லைனின் மொத்த நீளம் 71.56 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
