வியாழக்கிழமை (ஜூன் 11) வர்த்தகத்தின் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கீழ் மட்டங்களில் காணப்பட்ட ஆதரவு காரணமாகத் தங்களின் சரிவை கணிசமாகக் குறைத்துக் கொண்டன.
காலை 10 மணி அளவிலான வர்த்தகத்தில், சென்செக்ஸ் 231.51 புள்ளிகள் சரிந்து 73,751.67 புள்ளிகளிலும், நிஃப்டி 71.55 புள்ளிகள் சரிந்து 23,143.40 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
எனினும், அதன் பின்னராக நாளின் குறைந்தபட்ச புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை அதிரடியாக உயர்ந்து வலுவான மீட்சியைப் பதிவு செய்துள்ளது.
காலையில் வீழ்ச்சி.. அடுத்த சில நிமிடங்களில் வேகம் எடுத்த பங்குச்சந்தை! நிஃப்டி, சென்செக்ஸ் மீண்டது எப்படி?
