நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்பிக்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சியினரும் பொதுவாக ஒன்றுபடுவார்கள்.
ஆனால், தற்போதைய மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் மட்டும் தங்களுக்குரிய அரசு சம்பளத்தைப் பெற மறுத்து முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட பதிலின் மூலம் இந்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு வேறு துருவங்களைச் சேர்ந்த பின்வரும் இந்த உறுப்பினர்கள், மக்கள் பணத்தைச் சேமிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஹரியானாவின் குருக்ஷேத்ரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன் ஜிண்டால்.
உள் மணிப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் பிமோல் அகோய்ஜம்.
சம்பளம் வாங்க மறுக்கும் 2 எம்பிக்கள் நவீன் ஜிண்டால் மற்றும் பிமோல் அகோய்ஜம்
