போன்பே நிறுவனமானது நாடு முழுவதும் போக்குவரத்து தொடர்பான கட்டணம் செலுத்தை எளிமையாகும் வகையில் ரூபே ‘தேசிய பொது இடப்பெயர்வு அட்டை’யை (National Common Mobility Card, NCMC) வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் போக்குவரத்து சார்ந்த கட்டணங்களுக்கு இந்த அட்டையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில், மெட்ரோ ரயில், பேருந்து, டோல் கேட் மற்றும் பார்க்கிங் என போக்குவரத்து தொடர்பான அனைத்து இடங்களிலும் இந்த அட்டையைப் பயன்படுத்த முடியுமாம்.
இது போக்குவரத்து கட்டணம் செலுத்தல் முறையையே முழுமையாக மாற்றும் திறனைக் கொண்டிருக்கிறது.
ஒரே நாடு ஒரே அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது போன்பே
