டெல்லி பாரத் மண்டபத்தில் அமெரிக்க தூதரகம் நடத்திய விழாவில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் கண்டு ரசித்தனர்.
டெல்லி பாரத் மண்டபத்தில் அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகி ஜோனிடா காந்தி இணைந்து நடத்திய இசை கச்சேரி விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர், இசை கச்சேரியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
