மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், சாமானிய மக்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் ஒரு மூலோபாயத் திட்டத்தை அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
எல்பிஜி தட்டுப்பாடு: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை! மாற்றுத் திட்டம் தயார்
