கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, இன்று அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று வரை ஒரு சில பகுதிகளில் குறைந்த அளவிலாவது சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 11) முதல் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் தடையால் உணவக உரிமையாளர்கள், பேக்கரிகள் மற்றும் சிறு குறு உணவு வியாபாரிகள் தங்களின் தொழிலைத் தொடர முடியாமல் நிலைகுலைந்து போயுள்ளனர்.
கடலூரில் வணிக சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தம்: உணவகங்கள் மூடப்படும் அபாயம்
