இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் பகுதிநேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வங்கியின் மதிப்புகள் மற்றும் அறநெறிகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டது, முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கியின் கார்ப்பரேட் நிர்வாகம் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, இன்று (மார்ச் 19) காலை வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 8% வரை சரிந்து, 52 வார கால குறைந்தபட்ச விலையான ₹772 ஐத் தொட்டது.
எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 8% சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்
Estimated read time
0 min read
