மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

Estimated read time 0 min read

மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பின் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிக்குப்பின் 90 லட்சத்து 83 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது.

இதனிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author