இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்..! எதுக்கு கொண்டாடப்படுகிறது..!

Estimated read time 1 min read

இந்தியாவின் இரும்பு சட்டகம் என்று அழைக்கப்படும் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கும் ஒரு நாள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், 2006ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் தேசிய சிவில் சர்வீஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் 1947ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஆட்சிப்பணிகளுக்கான பள்ளியில் இந்தியாவின் முதல் பிரிவு சிவில் சர்வீஸ் பணியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர்களையும், அவர்களது பணியையும் இந்தியாவின் இரும்பு சட்டகம் என்று குறிப்பிட்டு பாராட்டினார்.

அந்த நாளையே இந்திய அரசு 2006ம் ஆண்டிலிருந்து தேசிய சிவில் சர்வீஸ் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த நாளில் இந்திய நாட்டிற்காக இத்தனையாண்டு காலத்தில் எத்தனையோ சிவில் சர்வீஸ் அதிகாரிகள் செய்துள்ள தியாகங்களை போற்றும் வகையில் நிகழ்வுகள் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பை பின்னணியாக கொண்டு இந்த நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான தேசிய சிவில் சர்வீஸ் தினத்தின் தலைப்பாக “Viksit Bharat” என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும்.சேவை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் என அனைத்தையும் சமமாக அணுகி பணிபுரிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author