நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் நீண்டகால விண்வெளித் திட்டங்களுக்குத் தயாராகும் வகையில், ஐரோப்பிய விண்வெளி முகமை ஒரு முக்கியமான ஆய்வைத் தொடங்கியுள்ளது.
ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள ஜெர்மன் விண்வெளி மையத்தின் (DLR) ‘Envihab’ ஆராய்ச்சி மையத்தில், 6 தன்னார்வலர்கள் 100 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் தங்கியிருக்கும் ‘SOLIS100’ என்ற ஆய்வு இன்று தொடங்கியுள்ளது.
விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் தனிமை, மன அழுத்தம் மற்றும் சுயாட்சி ஆகிய சவால்களை மனித உடல் மற்றும் மனம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும்.
மனிதர்களின் செவ்வாய் கிரகப் பயணம்: ஜெர்மனியில் தொடங்கிய 100 நாள் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு
