இந்திய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, கட்டண சுங்கச் சாவடிகள் இல்லாத தடையற்ற முறையை டிசம்பர் 2026க்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ள இந்த நவீனத் தொழில்நுட்பம், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் தடையின்றிப் பயணிக்க வழிவகை செய்கிறது.
மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியப் பயணிகளின் அனுபவம் முற்றிலும் மாறப்போகிறது.
டிசம்பர் 2026க்குள் கட்டண சுங்கச் சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைகள்: எப்படி செயல்படும்?
