ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள பஞ்ச்குலாவில் இந்த விழா நடைபெறவுள்ளது.
“அக்டோபர் 17 ஆம் தேதி முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். இதற்காக பிரதமரின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.” என்று மனோகர் லால் கட்டார் கூறினார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பஞ்ச்குலாவில் ஏற்கனவே நடந்து வருகிறது.
“நிகழ்ச்சிக்கான இடத்தை நாங்கள் தயார் செய்கிறோம்,” என்று பஞ்ச்குலா துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் இதை உறுதி செய்துள்ளார்.
ஹரியானாவில் மூன்றாவது முறையாக பதவியேற்க நாள் குறித்தது பாஜக
