முன்னாள் குரோஷியா அரசுத் தலைவர்-ஐவோ ஜோசிபோவிச் சமீபத்தில் சீன ஊடக குழுமத்திற்கு சிறப்புப் பேட்டியளித்த போது கூறுகையில்,
கடந்த 30 ஆண்டுகளில் பெய்ஜிங் மாநகரில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது, சீனா பெற்றுள்ள சாதனைகளை வெளிகாட்டியுள்ளது.
குறிப்பாக சீனாவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் சாதனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, வாகனம் முதலியவற்றில் வளர்ச்சிச் சாதனை நம்ப முடியாத அளவில் உள்ளன. மக்களின் வாழ்க்கை நிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சமத்துவமான கூட்டாளியுறவாக சீனா விளங்குகிறது. குறிப்பிட்ட துறைகளில், உலகில் தலைமை தாங்கும் பொருளாதார விவகாரக் கூட்டாளியாகவும் சீனா விளங்கும் என்றார்.
