பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
பழைய சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில், அதிகாலை 4:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அந்தச் சமயத்தில் நோன்பு தொடங்குவதற்கான ஸஹர் உணவிற்காக மக்கள் விழித்திருந்தபோது இந்த விபத்து நேரிட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கராச்சியில் பயங்கர எரிவாயு கசிவு வெடிப்பு: 16 பேர் பலி
