“யார் சொன்னது தமிழ் கஷ்டம்னு?” – சதம் அடித்து மிரட்டிய 83 மாணவர்கள்…

Estimated read time 1 min read

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் புதிய சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு “அன்னைத் தமிழுக்கு” மகுடம் சூட்டும் வகையில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

கடினம் எனக் கருதப்படும் மொழிப்பாடமான தமிழில் மட்டும் இந்த முறை 83 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று ‘சென்டம்’ அடித்து அசத்தியுள்ளனர். பொதுவாக அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களில்தான் சதம் அடிப்பார்கள் என்ற நிலையை மாற்றி, தமிழ் மீதான தங்களின் காதலை மாணவர்கள் மதிப்பெண்கள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

ஒரு பக்கம் கம்ப்யூட்டர் சயின்ஸ், மேக்ஸ் என மாணவர்கள் மார்க் அள்ளினாலும், “எங்கள் தாய்மொழி தமிழிலும் நாங்கள் கில்லாடிதான்” என 83 பேர் காட்டியுள்ள இந்த அதிரடி பெர்ஃபார்மன்ஸ் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author