ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-ஜுபைர் வியாழக்கிழமை (மே 8) புதுடெல்லிக்கு திடீரென அறிவிக்கப்படாத பயணம் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் குறைவாக இருந்தாலும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பிட்டார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி இருதரப்பு கூட்டு ஆணையத்தின் திட்டமிடப்பட்ட அமர்வுக்காக டெல்லிக்கு வந்த சிறிது நேரத்திலேயே அல்-ஜுபைரின் வருகை வந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா?
