ஈரானை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்றுவிட்டதை அந்த நாடு ஒருவேளை மனதளவில் இன்னும் உணராமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் அதுதான் நிலைமை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் உள்ள ஒவ்வொரு இலக்கையும் தாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்திற்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே போதும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்கா குறிவைத்திருந்த சில முக்கியமான இலக்குகளில் சுமார் 70 சதவீதத்தை ஏற்கனவே அடைந்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மீதமுள்ள இடங்களையும் எப்போது வேண்டுமானாலும் தங்களால் தாக்க முடியும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஈரானைத் தோற்கடித்தாலும், அவர்கள் முழுமையாக அடங்கிவிட்டார்கள் என்று அர்த்தமில்லை எனக் குறிப்பிட்ட டிரம்ப், தங்களுக்குத் தேவையான பிற இலக்குகளும் இன்னும் கைவசமே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
